எழுதி முடித்த கவிதைகளின்
முதல் இரசிகனாய்
என் பேனா
கசங்கியிருந்த காகிதம்
பட்டமாகியது
கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
காணாமல் போன குழந்தை
கிடைத்து விடுகிறது
சுவரொட்டிகளில்
தெருகூடி சண்டை
கண்ணீர் விடும்
ஆடிகுழாய்
எடுபடவில்லை
அவளுக்கான கவிதையில்
கவிஞனாய் நானும் எவரும்
முதிர் கன்னிக்கு
வேண்டிய வரம் கிடைத்தது
பூசாரியிடமிருந்து குங்குமம்
சாலையை கடக்கும் ஆடுகள்
நின்று போகிறது
மேய்ப்பவனின் இதயம்
சின்னத்திரையில்
ஓரு பெரிய ஈடைவேளை
விளம்பரம்
பயமில்லாமல் சுத்தும்
நடு இரவில்
சுவர் கடிகாரம்
அவள் தூக்கி எறிந்த பூவால்
சக்காளத்தியாகும்
என் கவிதைப் புத்தகம்