வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!

கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!

கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!

மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!

இரகசிய கனவுகளின்
ரகசியம் பூட்டுகின்றேன்!

விழிகள் வழியே
தெறித்து ஓடுகிறாய்!

புலன் இன்பங்கள்
பொய்படும்!
மெய் அன்பு
ஞான பிரபஞ்சத்திற்கு
வழி விடும்!

புனிதனே
புரவியில் வந்து
அள்ளிச் செல்லு!

நெடு மலை
அருவி அடிவாரம்
பள்ளி கொள்ளு!

விடிந்திடும் முன்னே
விடை பெற்றுச் செல்லு!

கனவில் வந்ததை
கவிதையில் சொல்லு!

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்