கறுப்பு நிறத்தழகி !
இயற்கையின் நிறத்தினை
இயல்பானத் தரத்தினை
இருளின் வடிவாக
இருக்கப் பெற்றவளே !

கருப்பை இருப்பைக்
கவர்ந்து ஈர்த்து
கறுப்பை நிறமாய்க்
காலத்தில் பெற்றவளே !

உடலோ கறுப்பு
உதிரமோ சிவப்பு
கட்சியில் இதுதானே
கழகத்தின் சிறப்பு !

பேரழகி உன்னைப்
பார்த்தால் போதும் ,
தார்ரோடு என்றும்
தலைகவிழ்ந்து கிடக்கும் .

அடுப்புக்கரி தோற்றுவிடும்
அணங்குஉன் முன்னாலே ,
அட்டக்கறுப் பென்பது
அகிலத்தில் இதுதானோ !

வடைச்சட்டி போட்டியிட
வந்திடுமா உன்னருகில் ?
கடைக்கண் மையுமே
கையெடுத்துக் கும்பிடுமே !


2 Comments

ஜவ்வாது முஸ்தபா · மார்ச் 30, 2017 at 16 h 17 min

மிக அருமை சார்..
இனிய வாழ்த்துகள்.
உங்கள் கவிதையில் கறுப்பு நிறம்
அது கலங்கமற்ற நிறமென ஒரு உணர்வு மேலிடுகிறது.

சுசிமணாளன் · ஜூன் 2, 2017 at 15 h 14 min

பேரழகி உன்னைப்
பார்த்தால் போதும்,
தார்ரோடு என்றும்
தலைகவிழ்ந்து கிடக்கும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்