அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !

தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி, தன் துணையின்
தேவைகளைக் கவனிப்பாள் !

சிக்கென்று உடை அணிந்து
சிங்காரமாய் சிகைத் திருத்தி
சில்லென்ற குளிர் வெளியில்
சீக்கிரமாய்ப் பணிக்குச் செல்வாள் !

ஆடவர் பலருக்கு நிகராக
அயராது உழைப்பைத் தருவாள் !
ஆதாயம் தான் பார்க்காமல்
ஆனந்தமாய் அவள் உழைப்பாள் !

வீடு வந்து சேர்ந்ததுமே
வீட்டுப் பணியில் மூழ்கிடுவாள் !
விளையாடும் தன் குழந்தைக்கு
விருப்புடனே அவள் தாயாவாள் !

நாள் கணக்காய் தேய்ந்தவளும்
தோழியின் பிறந்தநாள் சிறப்பிற்கு
சென்றுவர விரும்பி கணவனிடம்,
நம்பிக்கையுடன் கேட்டாளவள் !

பெண்ணாக வீட்டில் இருப்பதுதான்
பெண்ணுக்கு அழகு என்றான் !
பெண்மைக்கிது உதவாதோ வென்று
அன்னவளும் முடங்கியே இருந்திட்டாள் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்