தண்ணிக் கொடமெடுத்து
தனியாகப் போறவளே
தாய்மாமன் நானிரிக்கன்
தாகத்தோட தானிரிக்கன்

தண்ணியூத்த முறையுமில்ல
தாகந்தீர்க்க வழியுமில்ல
மஞ்சக் கயிறு தந்தியன்டா
மரிக்கொழுந்தா வந்திடுவன்

வேகத்தோட நீ பறந்தா
தேகத்தோட வேகுதடி
தாம்பூலம் மாத்த வாறன்
தாமதமாப் போனா என்ன

தாமதிச்சி நான் போனா
பேமிதிச்சிப் போட்டுடுங்கா
பேசாம இருந்து போட்டு
கூசாம வந்து கேளு

தங்கத்துல செம்பு செஞ்சி
தலைக்கிமேல ஒன்ன வெச்சி
தாங்கத்தான் நெனச்சிரிக்கன்
தாரமா நீ வாடி புள்ள

வீரமா நீ பேசக்குள்ள
வீராப்பா இரிக்கி மச்சான்
வேணாண்டு சொல்லிப் போட்டா
வேகி நொந்து தவிச்சிருவன்

பெரு முல்லக் காடிரிக்கி
பெருத்த ரெண்டு ஆடிரிக்கி
கக்கத்துக்க வாடிபுள்ள
பக்கத்தில யாருமில்ல
மாட்டு வண்டி ஓட்டினாலும்
மாசால ஒண்டும் கொறயலகா
மால மகரி நேரமாச்சி
மாட்டப்போடு தூரமாச்சி.

மகரி = சூரிய அஸ்தமன நேரம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்