சமயம் படைக்கா பரமனையே
சாலப்பகன்றது தமிழ் நூலாம்
சமர்த்தாய் ஆரியன் கற்றானே
சமயம் அறிந்து தீயிட்டானே -பின்

வந்தாரும் தமிழ் அழித்தாரே
இரும்போர் சிலரும் பழித்தாரே
விரும்பாதாரும் வெறுத்தாரே
மறப்ப தெங்கனம் எம்மொழியாரே

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு

முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி

இயல் இசை நாடகம் தந்தனையே
இலக்கிய இலக்கியம் கொண்டனையே
காவிய காப்பியம் கண்டனையே
காதல் வரச் செய்தனையே

தமிழே தரணி வாழ்த்திட வா
தமிழ் இணம் ஓங்கி வளர்ந்திட வா
தலைமுறை தலைமுறை
தழைத்திடவா.

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...