சமயம் படைக்கா பரமனையே
சாலப்பகன்றது தமிழ் நூலாம்
சமர்த்தாய் ஆரியன் கற்றானே
சமயம் அறிந்து தீயிட்டானே -பின்
வந்தாரும் தமிழ் அழித்தாரே
இரும்போர் சிலரும் பழித்தாரே
விரும்பாதாரும் வெறுத்தாரே
மறப்ப தெங்கனம் எம்மொழியாரே
நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு
செம்மொழி நம்மொழி எனக்கூறு
செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு
சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு
முது மொழி நம் மொழி மூல மொழி
பிறந்தன இதன்வழி பல மொழி
இதற்கிணை ஏது ஒரு மொழி
செகத்திற் அறிந்த தமிழ் மொழி
இயல் இசை நாடகம் தந்தனையே
இலக்கிய இலக்கியம் கொண்டனையே
காவிய காப்பியம் கண்டனையே
காதல் வரச் செய்தனையே
தமிழே தரணி வாழ்த்திட வா
தமிழ் இணம் ஓங்கி வளர்ந்திட வா
தலைமுறை தலைமுறை
தழைத்திடவா.