முண்டாசு கட்டிய பாரதியே செல்வ
……. பாரதியே முத்தமிழ் கொட்டிய
அண்ட சராசரம் எங்கிலுமே கவி
……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே!

சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச்
……. சிந்திட வந்துப் பிறந்தனையே!
இத்தரை மக்களு மின்புற வேகவி
……. ஈன்று கொடுத்துச் சிறந்தனையே!

உத்தம யோகியே ஊருக்குள் சாதியை
……. உற்ற நெருப்பில் எரித்தவனே!
சித்தனே செந்தமிழ்ச் சீர்கவியே உனைச்
……. சிந்தனை தன்னில் நிறைத்தனமே!

பெண்ணின் சுதந்திரம் பேசியவா மதப்
……. பேடித் தனங்களை ஏசியவா!
எண்ணத் துயர்வினைக் காட்டியவா மதி
……. ஏந்திடும் ஆற்றலைத் தீட்டியவா!

பாக்களைப் பாமரர் கேட்டிடவே அதில்
……. பாங்குடன் தீக்கனல் பூட்டியவா!
மாக்களை மக்களா யாக்கியவா உனை
……. மாமனத் தேத்தித் துதிக்கின்றனம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »