(கும்மி)

கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள்
கூடாரத் தைவிட்டு ஓடிட வே
துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின்
சொந்தக்கா ரக்கவி பாரதி யே!

வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி
வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே
தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத்
தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்!

காக்கை குருவியைக் காதலித் தாய் – வீட்டைக்
காத்திடும் நாயினைக் காதலித் தாய்
பாக்கள னைத்தையும் காதலித் தாய் – வாழ்வைப்
பாதியில்ஏ னய்யா நீமுடித்தாய்?

இற்றைத்த மிழ்நாட்டில் நீயிருந் தால் – ஐயோ
ஏங்கித்து டித்தேயி றந்திருப் பாய்
உற்றநி லைவரும் என்றறிந் தோநீயும்
உன்னுயிர் விட்டுப்ப றந்தனை யோ?

இந்தநி லைமாறும் என்றுநம் பி – நாங்கள்
ஏங்கிக்க ழிக்கிறோம் வாழ்க்கையி னை
மந்தைக ளாயினும் உன்னையெண் ணி – இன்று
வாழ்த்துகி றோம்நீயும் ஏற்றிடு வாய்!


1 Comment

பாவலர் மா.வரதராசன் · டிசம்பர் 12, 2016 at 1 h 52 min

மிக்க மகிழ்ச்சி ஐயா. தமிழ்நெஞ்சத்தின் சிந்த பணி தொடர வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »