சாமத்தில் எழுந்து
காமத்தில் நுழைந்து
மோகத்தை விதைத்தாயடா – இரு
போகத்தை அறுத்தாயடா.
வேகத்தில் மிதந்து
சோகத்தை மறந்து
தேகத்தை வதைத்தாயடா – என்
தூக்கத்தைக் கெடுத்தாயடா.
தாகத்தை நினைந்து
மேகத்தைத் திறந்து
யூகத்தில் சரிந்தாயடா – பட
நாகமாய் விரிந்தாயடா .
காகத்தைச் சினந்து
கூகையை வெறுத்து
தோகையை விரித்தாயடா – என்
தூய்மையைப் பறித்தாயடா.
ஆகமவிதிப் படியேநீ
ஆறுகால பூசையில்
சொர்க்கத்தைத் தந்தாயடா – எரி
சூளையிலே வெந்தாயடா .