தென்றல் அவள் மேலாடை

தென்றல் அது தாலாட்ட
மேலெழுந்த அவள் நூலாடை
முக்காடாய் அவன் முகம் வருட

வசியம் செய்யும் அவள் வாசம்
சுவாசமாய் அவன் நாசிபுக
முழுதாய் அவளை முழுங்கிவிட
அனுபவக் காற்றை தூதுவிட்டான்

எடுத்திடவோ கொடுத்திடவோ
காதல் மட்டுமே அவன் கையிருப்பாய்
மறுத்திடவோ ஏற்றிடவோ
நாணம் மட்டுமே அவள் தவிப்பாய்

மண்ணில் திரியும் நிலவுமகள்
கண்ணுக்குள் அவனைக் குவிக்க
இடை புகுந்த துணைக் காற்று
எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது

நடுவில் படர்ந்த நடைதூரம்
நாலடிக்குள் சுருங்கி அருங்கி
தடைத் தகர்த்து இடைத் தூர்ந்து
இடைப் பற்றியது மன்மதக் கரம்

உடைப்பற்றிய ஊதக் காற்று
மடைத்திறப்பிற்கு கற்பூரம் காட்டி
விடைத் தெரியா இனபத் தவிப்பிற்கு
படையல் போட்டு பசியாற்றியது!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »