குந்தைகளைத் தண்டிக்கும்போது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை..
—————————————————————–
* குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்….பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
* தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்…. மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
* தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்…. உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
* தண்டித்த உடனே “ஐயோ பாவம்” என்று பாசத்தைக் காட்டி விடக் கூடாது,….குழந்தை தன் தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்ட வேண்டும்.
*தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்…அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
*குழந்தையைத் தண்டிக்கும் முன்,
செய்த தவறு பற்றியும், நாம் தரப்போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லிக்காட்டி தவறை உணர்த்த வேண்டும்….
*திட்டித் தீர்த்து மனதில் ரணங்களை உருவாக்கிவிடக் கூடாது..
*எனவே புரிந்து கொள்வோம்….
குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.
*தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள்தான் உருவாகும்.
*தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிட உள ரீதியான அணுகு முறையே சிறந்தது.
1 Comment
கே.தேன்மொழி தேவி · நவம்பர் 13, 2016 at 10 h 43 min
ஆம். தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிட உள ரீதியான அணுகு முறையே சிறந்தது.