கண்டாங்கி சேலைகட்டி வாருங்கடி – வாருங்கடி
கவிராஜன் பேத்திபுகழ் பாடுங்கடி.
செண்டாடும் குழலழகி கணவரவர் – கணவரவர்
ஸ்ரீராமன் புகழைச்சொல்லி வாழ்த்துங்கடி.

மூவேந்தர் பரம்பரைகள் ஆண்டநிலம் – ஆண்டநிலம்
முக்கனியும் சர்க்கரையும் விளையும்நிலம்.
பாவேந்தர் கவிமழைகள் பொழிந்தநிலம் – பொழிந்தநிலம்
பார்முழுதும் பலரும்வந்து புகழ்ந்தநிலம்.

வரப்பெல்லாம் முத்திருக்கும் வயல்களிலே
வைரமணிக் கொத்திருக்கும் வழிகளிலே
சிறப்பெல்லாம் பெற்றிருக்கும் ஊர்களடி
ஸ்ரீராமன் வந்துதித்த தேசமடி.

செந்தூரப் பொட்டழகி பாட்டியடி – பாட்டியடி
ஸ்ரீராமன் தன்னை பெற்ற தேவியடி.
கவிநாட்டி புகழ்படைத்தார் பாட்டனவர் – பாட்டனவர்
கனிமொழியால் பெருமைபெற்றார் பாட்டியவர்

முன்னூறு நாள்சுமந்த தாயவள்தான் – தாயவள்தான்
முத்தமிழாய் வீசுகின்ற தென்றலடி.
கண்ணாறு பட்டுவிடும் செல்லத்துக்கு – செல்லத்துக்கு
கறுப்புப்பொட்டு கன்னத்திலே வையுங்கடி.

தொடுவானம் தோற்றுவிடும் இதழ்சிவப்பு – இதழ்சிவப்பு
தொலைநோக்கில் ஒளிகாட்டும் கண்கருப்பு
அடிவானம் கறுக்குமுன்னே வாருங்கடி – வாருங்கடி
அவளழகை பெருமைகளை கூறுங்கடி.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்