உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.

உன்னை
நினக்கும்போதெல்லாம்
உடனே
பரிசாகத் தருகிறாய்
கவிதைகளை.

உன்னைப் பற்றிய
என் கவிதை
அழகானது
உன்னைப்போல.

கடல் நான்
கவிதை அலைகளை
உன்னை நோக்கி
அனுப்பிக் கொண்டே இருப்பேன்.

என் எல்லாப் பாடல்களும்
உனக்கான
கரையிலேயே நிற்கின்றன
கிளிஞ்சல்களைப்
பொறுக்கிக் கொண்டு.

உனக்கான
கவிதை தேடி
மொழிக் கடலில்
முத்துக் குளிக்கையில்
மூழ்கிப் போனேன்.

முனை மழுங்கிய
என் எழுதுகோல்
தடுமாறுகிறது
ஆனாலும்
என் எல்லாக் கவிதைகளிலும்
உயிரோட்டமாய்
உலவுகிறாய் நீ.

உன் மீதான
என் காதலை
ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
என் கவிதைகள்
குப்பைகள்.

எங்கே
எழுதி முடிக்கின்றேனோ
அங்கிருந்து துவங்குகிறது
உனக்கான
இன்னொரு பாடல்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...