குறள் வெண்பா 10
ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி
ஊன்றும் சுமையில் முதுகு
முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம்
பதுமை யிலைநீ பகர்
தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி
தளரா வளர்தெங்கு தான்
பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது
பிறர்மெச்சப் பாடுபடப் பீடு
உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில்
உறவதாய்க் கொண்டாய் உயர்வு
தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின்
இனிமையாய்க் கொண்டாய் உலகு
தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி
தோற்சுருக் காயதுவே தோன்று
தன்மானம் கைக்கொள்ளத் தாரணியில் ஏற்றமது
என்னும் முதுமை எழில்
சுடுவெயிலும் தண்மதியும் சேர்த்தொன் றதேகண்
டிடுமுதுமை தான்தளரா தின்று
அச்சமின்றி வாழ்வை அனுபவமா யேந்திவி(டு)
இச்சகத்தில் என்றாய் உணர்ந்து