“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”,
இரவின் அமைதியில்,
நெடுந்தூரமாய் மூழ்கிடவே,
ஆசைப்படுகிறேன்.
எனை அணைக்க வந்த இரவு,
என் உடலை
தட்டித் தாலாட்டுவதை
நான் உணர்ந்தேன்.
ஒவ்வொரு இரவும்
தனித்தனி ருசிதான்.
பருகிப்பார் …
அமிர்தம் ருசிக்கும்!
பழகிப்பார் …
உன் சுதந்திரம் புரியும்!
உறவாடிப்பார் …
உனக்கு சுகங்களைக் கொடுத்து
போர்த்திவிடும்!
வாயில் நீர்வடிந்து கசிகின்ற
முழு தூக்கத்திலும் கூட,
இரவின் பாதுகாப்பில்
அசந்து அனைத்தும் மறந்திருப்பாய்.