ஆதி மனிதன் உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன் உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.

நாகரிக மனிதன் பிறந்தான்
(அ)னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.

அக்காலம் முதல் இக்காலம் வரை
சேத்தை மிதித்து சோத்துக்கு வழி
காட்டும் விவசாயிக்கு
ஒரு முழக் கோவணம்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
என்பது பழ மொழி.
உடையைச் சுருக்கி பணத்தைச் சேர்க்க
பெண்கள் கண்டது சினிமாவின் வழி.

ஆபாசங்கள் தலை விரித்தாடுது.
அரை குறையான உடையின் விலை
தலைக்கு மேல் போகிறது.

சேத்தை மிதித்து நாத்து நடும் போது
சேலை சரிந்தால் அதைக் காண்பவர்
நெஞ்சம் சஞ்சலம் அடைவதில்லை.

அள்ளிப் பூசிய வர்ணனையோடு
கிள்ளிப் பார்க்கவும் நொள்ளி விளையாடும் விதமும்
இடை இடையே இடம் விட்ட உடை போட்டு
துள்ளியாடும் போது தான் சஞ்சலப்படுகிறது நெஞ்சம்.

அகண்ட வானமும் உலாவும் நிலாவும்
உடைகள் அணிவதில்லை.
ஞானிகளும் துறவிகளும் ஆடைக்கு
முன் உரிமை கொடுப்பதில்லை.

விண்ணும் மண்ணும் தடை இல்லா உலகம்
காற்றும் மழையும் மூடி மறைக்காத ஒன்று
இத்தனையும் நிர்வாணமாக கொண்டு
நகர்கிறது நாளும் பொழுதும் என்றும்
நிம்மதி இல்லாத மனமும் ஒரு
வகையில் நிர்வாணம் தான்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...