அல்லிமலர் போலிருக்கும்
அழகானப் பெண்ணருகில்
கொல்லிப்பலா கொஞ்சுகின்ற
கவிஞரிவர் தமிழ்நெஞ்சம்,
அள்ளிக்கொண் டுசென்றிடவே
ஆவலுடன் நிற்கின்றார்,
பள்ளியறைக் காத்திருக்க
பலகனவுப் பூத்திருக்க.
வெள்ளிநிலவு இங்குவந்து
விளையாட்டில் தனைமறந்து
பில்லியாட்ஸ் ஆடுகின்ற
பேரழகை என்னென்பேன்,
துள்ளியாடும் பருவமதில்
தோகைதனை விரிக்கின்ற
நல்லழகுத் தேவதையை
நானிங்குக் காண்கிறேனே!
1 Comment
நெல்லை உலகம்மாள் · அக்டோபர் 5, 2016 at 19 h 19 min
அல்லி மலர் என்றாலும்
அள்ளி நுகர முடியாது.
உற்றவனும் வந்திட்டால்
உரிமைதனை மீட்டிடுவான்.