பாவாணர் எழுத்தும் சொல்லும்
…..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்!
பாவாணர் உரைக்கும் பாட்டின்
…..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்!
பாவாணர் எழுச்சிக் காட்டும்
…..பழம்பெருமைக் காக்க வேண்டும்!
பாவாணர் வழிச்செல் நண்பா!
…..பண்புடைனம் மொழியைக் கற்போம்!
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.