விருத்தப்பா

தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள்
….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை
சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ
….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்!
தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும்
….. தன்னிழலில் பசியாற உதவும் பாரீர்!
என்னற்ற மலர்களெல்லாம் வாசம் வீச
….. என்னிதயம் புன்னகைக்க பூக்கள் போதும்.!

தொட்டுமலர் தொடுத்தாளே என்றன் மங்கை
….. தோடிராகம் மீட்டிடுதே என்றன் மையல்
வட்டுநிலா முகத்தினவள் காதல் சொல்லி
….. வாட்டமெல்லாம் போக்கியவள் இன்பம் தந்தாள்
சொட்டுமழை நனைத்திடுதே தேகம் எல்லாம்
….. சொகுசுகட்டில் சேர்வாளே எனைய ணைந்து
கட்டுண்டு காலங்கள் நகர்த்தித் தூங்க
….. காளையெனை புன்னகைக்க தூவும் பூக்கள்.!

தாவணியில் எனைமயக்கும் விழிவேல் கொண்டு
….. தங்கமகள் நடையினிலே வீழ்த்த என்னை
ஆவணியில் தாலிகட்ட மனமோ ஏங்க
….. ஆவரப்பூ கூந்தலேறி வாசம் சூழ
காவலையும் தாண்டிவந்து மணமு டிக்க
….. காதலாலே காத்திருக்கும் மாமன் நானே
ஆவலுடன் வந்திடுவேன் உன்னைச் சேர
….. ஆதிரையே புன்னகைக்க பூக்கள் சிந்து.!

தென்றலெனை தீண்டிடாது தீண்டு நீயும்
….. தேகமெல்லாம் சிலிர்க்குதடி சிந்தை யுள்ளே
கொன்றைமலர் சின்னவளே சிவந்த பெண்ணே
….. கொல்வதென்ன மௌனத்தால் கனக்கும் நெஞ்சு
வன்முறையும் ஆயுதங்கள் தாங்கும் மேனி
….. வான்மழையாய் குளிர்விக்கும் கண்கள் ரெண்டும்
சின்னவளே புன்னகைக்கா பூக்க ளுண்டோ
….. சிங்காரப் புன்னகையாள் பூக்கள் பூக்க..!


1 Comment

ezhil · அக்டோபர் 18, 2016 at 14 h 43 min

Super man are!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...