ஒத்தையடிப் பாதை வழி 

புத்தகம் சுமந்த படி
நான் போகையில் ஒற்றை மலரோடு
அத்தை மகன் வந்து நின்றான்.
தெத்துப் பல் தெரியும் வண்ணம்
புன்னகை புரிந்தான்.

கொத்தோடு முள்ளிருந்த
ஒற்றை ரோஜா மலர் கொடுத்து
மொத்தமாக என்னை
கொள்ளை கொண்டான்.
சின்ன ரோஜா மலர்
சுகந்தம் பரப்ப, மெல்லமாக.
என் சிவந்த இதழ் இரண்டும்
சின்னதாய் முத்தம் பதிக்க!

மலர் கொடுத்த
அத்தை மகன் வெட்கம் கொண்டான்.
முத்தம் தன்னிடம் இருந்து
தவறியதால் துக்கம் கொண்டான்.
நான் மெதுவாக நகர்ந்தேன்
தலையை சாத்த வாறு…

அடுக்கிய புத்தகம் நடுவே
ரோஜாவை மறைத்து வைத்து
மாந்தோப்பு வழியே நடந்தேன்.
நினைவுகள் பின் நோக்கிடவே…
அத்தை மகன் ஒற்றை மலரோடு
நின்ற காட்சி மீண்டும் கண்ணில் உதயமாச்சு.

உதிராத காதலுக்கு உதவிட வந்த ஒற்றை மலரே…

என் உதிரம் கொண்ட வண்ணத்தில்
எதிரே வந்த ரோஜா மலரே மலர்களின் ராஜா
என் ராஜன் கொடுத ஒற்றை மலரே
இன்று முதல் உமக்கு மெத்தை இட்டேன்
என் புத்தகம் நடுவே.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...