காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்!
….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்!
சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்!
….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்!
காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்!
….. கருத்தானப் பசுமைவண்ணம் அவர்செயலில் கண்டோம்!
ஏந்தியுரைச் செய்திடுவோம் ஏற்றத்தைக் காண்போம்!
….. இயக்கமான சக்கரத்தை இதயத்தில் வைப்போம்!

வெள்ளையனே வெளியேறு விளங்கிடவே சொன்னோம்!
….. வென்றதனால் அந்நியனை விலகிடவே செய்தோம்!
நல்லமனம் சுதந்திரத்தை நயப்புறவே பெற்றோம்
….. நாட்டுநலம் காக்கின்ற நமதுரிமை கொள்வோம்
உள்ளமதில் காந்தியவர் உயர்வினிலே ஆண்டோம்
….. உருப்படியாய் ஒருநாடாய் உருவாக்கிக் கொண்டோம்
நல்லதமிழ் திறமனைத்தும் நாம்காக்க வேண்டும்
….. நல்லோர்கள் பார்வையிலே நனிசிறக்க வேண்டும்!

கற்றவரும் சமநோக்கில் கலந்திடவே வேண்டும்!
….. கலைபலவும் சிதையாமல் காத்திடவே வேண்டும்!
பெற்றவரும் தாய்மொழியைப் பெரிதுவக்க வேண்டும்!
….. பிள்ளைகளின் மனதினிலே பிணைத்திடவே வேண்டும்!
நற்றவரும் வாழ்த்துரைக்க நாடுயர வேண்டும்!
….. நலமான திட்டங்கள் நாடிடவே வேண்டும்!
உற்றவரும் மற்றவரும் ஒன்றாக வேண்டும்!
….. உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...