(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015)
விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும்
… விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை
அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை
… அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர்
நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே
… நேர்படவே வாழ்த்துகாட்டி நெறிகள் சொல்லி
மிஞ்சிநிற்கும் மனிதகுல மாண்பு நீரே
… மின்னிமறைந் திடவல்ல வாழ்வும் என்றோய்.
விஞ்ஞான சிறப்பெல்லாம் உன்னைப் பாட
… வீணாகா இளைஞர்கள் மனத்தில் நின்றாய்
மஞ்சத்தின் பிடிமறந்து வெல்லும் சக்தி
… மாணவர்கள் எண்ணத்தில் விதைத்து வைத்தாய்.
என்வாழ்வின் காலவெளி உன்னைக் கண்டு
… என்வாழ்வோ முழுமையென்பேன் அண்ண லுன்னால்
பொன்னான நாட்களாகும் உங்கள் வாழ்கை
… புடம்போட்டு எடுத்தாலும் குறையாச் செல்வம்
எந்தனது தலைமுறையின் கனவு நீரே
… ஏற்புடைய தலைமகனார் என்றும் நீரே
தன்னிகராய் தன்மானத் தோடு வாழ
… தரணியாளும் சக்தியாக கனவு தந்தாய்
உன்கனவாய் காணயிங்கு நாங்கள் உண்டு
… உண்ணதமாய் உலகுய்ய முயல்வோம் என்றும்
உன்வழியில் பீடுநடை நாங்கள் போட
… உடனிருந்து வழிகாட்ட இருக்க எங்கும்.
– கவிஞர் கு.நா.கவின்முருகு