திணரவைக்கும் திமிராலே
திரும்பி பார்க்க வைத்தாய் நீ
கிறங்கடிக்கும் சிரிப்பாலே
விரும்பிப் பார்க்க வைத்தாய் நீ
உன் சின்னஞ்சின்னஞ் சிணுங்களிலே
இளையராஜா இசை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி நீபேச
கவிதை கோடி நான் கோர்த்தேன்
மாசி மாத காற்றைப்போல்
மனசுக்குள்ளே நீ வீசு
உன்னை எண்ணி உயிர்த்தேனே
ஒற்றை வார்த்தை நீ பேசு
வாசப் பூவே நீ கேட்டால்
வானில்கூட பூப்பறிப்பேன்
வாழ்வின் பொருளே உனக்காக
வைரமுத்தை தோற்கடிப்பேன்
சாடையாலே நீ சொன்னால்
சாவைகூட சாகடிப்பேன்
கைகள் கோர்க்க நீ வந்தால்
காலின் கொலுசாய் நானிருப்பேன்