பிரண்டு படுத்த படுக்கையிலே தடவிப் பார்த்த கைகளுக்குத் தட்டுப்படாத மனைவி தேகம் உணர்ந்து துடித்தெழுந்தான் விஜய்.

என்ன செய்கிறாள் இவள். இன்னும் நித்திரை கொள்ளாமல் அவன் கைபட்டு மின்சாரம் தொழிற்பட்டு மின்விளக்கு வெழுத்தது. அறையின் வெளியே அவதானித்தான். சமையலறை வெளிச்சம் கதவிடுக்கூடாக கண்களுக்குப் பட்டுத் தெறித்தது. சமையலறை சென்றான். அங்கு மேசையிலே கைநீட்டிக் கையே தலையணையாய் மேசைமேல் முகம் புதைத்து தனை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள், கீதா. “கீதா……” தட்டி எழுப்பினான்.

“பிள்ளை வந்திட்டாளா, பிள்ளை வந்திட்டாளா…..”தடுமாறினாள் கீதா

“வராமல் எங்கே போகப் போகிறாள். வருவாள் தானே. வந்து படு. இன்றைக்கு லெக்ஷர்ஸ் முடிய நேரமாகி விட்டது என்று நினைக்கின்றேன். வந்து எழுத்துச் சாப்பிடுவாள் தானே|” அதட்டலாகச் சொன்னான் விஜய். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை.

“நீங்கள் போய்ப் படுங்கள். நாளைக்கு வேலை இருக்கிறது. நான் சாப்பாடு கொடுத்திட்டு வந்து படுக்கின்றேன்” என்று கூறித் தன் கையில் பத்திரமாய் வைத்திருந்த போட்டோவை ஒருதரம் பார்த்தாள். என்ன லட்சணமான பெடியன். குடும்பமோ, உத்தியோகமோ, அழகோ என்ன குறை இருக்கிறது. இவனை மட்டும் ஜெசிக்குக் கட்டிக் கொடுத்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம். தன் மகளைத் தரமான ஒருவனிடம் ஒப்படைக்க நாளும் பொழுதும் தேடிக் கண்டுபிடித்த ஒருவனுடன் காத்திருந்தாள் கீதா.

“என்னவென்றாலும் செய். நான் சொன்னால், கேட்கப் போகின்றாயா? திரும்பி வந்து படுக்கைக்குப் பாரமானான் விஜய். கண்மூடியவுடன் நித்திரையாள் அவனை தாலாட்டிவிட்டாள்.

மணி இரவு பதினொன்று. உணவகம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் உறங்க வேண்டும். கலகலப்பு மெல்லமெல்லக் குறைந்தது. ஜெசி தன்னுடைய கைகளில் அடங்கிக் கிடந்த ராமுடைய கைகளை விலக்கினாள்.

“அம்மா காத்திருப்பாள். நான் போக வேண்டும். இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி கள்ளமாய் வாழ்க்கையைக் கடத்துவது. நாம் தானே உறவுக்கு அத்தாட்சிப்படுத்திவிட்டோம். உயிருள்ளவரை எனக்கு நீங்கள்தானே. புதியபாதை வகுப்பதற்கு பொறுப்பான பதவி தேவை. அதற்கு சிறப்பான படிப்பு அவசியம் என்று தானே, எல்லாவற்றையும் மறைத்துவிட்டோம். உழைக்கும் காலம் சேர்ந்தே உழைத்துத் தரமான வாழ்வு காண்போம். இப்போது நாம் படிப்பதற்கு வசதி தேவையில்லையா! எங்கே போவோம். சட்டரீதியாகக் கணவன் மனைவி. ஆனால், எங்கள் பெற்றோருக்கு நாங்கள் செல்லப்பிள்ளைகள். திட்டமிட்டுத்தானே தொடங்கினோம். பொறுத்திருப்போம். இன்னும் 2 வருடங்கள் காலத்தைக் கடத்த வழிதான் இல்லையா?

ஒரு இளம் தம்பதியர், கள்ளங்கபடமில்லாக் குழந்தைகளாய்ப் பெற்றோருடன் வாழும் நிகழ்வுடன் பிரயாணத்திற்காகப் பிரிந்து பெற்றோரிடம் சென்றனர். கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கண்விழித்தாள், கீதா. என்ன ஒரு அபார சக்தி. தாய்ப்பாசத்தை ஒப்பிட்டுக் கூற வார்த்தைகளே இல்லை. எங்கிருந்தாலும் ஒரு காந்த சக்திபோன்ற உணர்வு பிள்ளைகளிடம் இழுத்தெடுக்கும். எவ்வாறான இரைச்சலிலும் இடரிலும் அழும் தன் குழந்தை ஓசை துள்ளியமாய் ஒலிக்கும்.

“ஜெசி வந்திட்டாயா? கெதியாக முகத்தைக் கழுவிட்டு வா. வந்து சாப்பிடு”

“எனக்குப் பசிக்கல்ல”

“இரவில் சாப்பிடாமல் படுக்கக் கூடாது. நீ வா! நான் குழைத்து ஊட்டிவிடுகிறேன்”

உடைமாற்றித் தாய் ஊட்டிய உணவை வாய்க்குள் அசைபோட்டாள் ஜெசி. உணவுண்ணும் சமயத்தில் தன் மனக்கிடங்கில் உள்ளவற்றை கீதா மெதுவாக எடுத்துரைத்தாள்.

“அம்மா இப்ப நான் படிக்கிறதா? கல்யாணம் கட்டி வாழ்றதா? சும்மா யாரோ ஒருவனைக் கொண்டுவந்து என்ர படிப்பைக் கெடுக்காதீங்க. படிப்பு முடிஞ்சாப் பிறகு இதெல்லாம் வைத்துக் கொள்ளுங்கள். எடுத்தெறிந்து பேசிவிட்டு சட்டென்று எழுந்து படுக்கைக்குப் போய்விட்டாள், மகள் ஜெசி.

சமையலறையை மூடிவிட்டுத் தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மகள் கல்விக்கரை கண்டவுடன் ஏற்ற துணை தேடுவோம், இல்லையென்றால், இப்பொருத்தத்தைக் காத்திருக்கச் சொல்வோம் என்று முடிவெடுத்தவளாய் படுக்கையை நாடினாள், அப்பாவித் தாய்.

பெற்றோரை உறிஞ்சிக் கல்வியை முடித்துவிட்டுத் தன் மனதுக்குப் பிடித்த ராமுடன் சிறப்பான வாழ்வு காணக் காத்திருந்த ஜெசி சட்டரீதியாக ராம் அளித்த மோதிரத்தை முத்தமிட்டபடி கண்ணுறங்கினாள்.

உடல் உழைத்து உடல் இளைத்து
உலகம் இழக்கும் வரை – எங்கள்
பிள்ளைகள் பிள்ளைகள் பிள்ளைகள் – என்று
ஏங்கும் பெற்றோர்கள் பேர் அப்பாவிகள்


1 Comment

sarveswary.k · ஜூலை 26, 2016 at 10 h 24 min

நிதர்சனம் ! நித்தமும் நிரந்தரம் தாய்மை ! காலம் மாறும் ! கருத்துக்கள் மாறுமென்றில்லையே! பிள்ளைகள் வாழ்வு காலத்தின் வேகம் . . . . கருத்துக்கள் வேகமாக மாறுமே ! என்னதான் செய்வது !அருமையாக விரித்து வைத்த எண்ணக்கருவோ சிறப்பு ! வாழ்த்துக்கள் கௌசி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..