ஆண்டான் அடிமை ஒழிய
அத்தனை நன்மையும் புரிவேன் ,
தீண்டாமை அறவே நீங்க
திருத்தங்கள் பலவும் செய்வேன்.
அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி
அநியாயம் செய்வோரைத் தடுப்பேன் .
படித்த கல்விக்கு ஏற்ற
பணியினை நானும் கொடுப்பேன்.
வட்டிக்கு விடுவோர் தம்மை
வருந்தி உழைத்திடச் செய்வேன்.
புட்டிக்குள் இருக்கும் மதுவைப்
பருகிடும் செயலைக் கொய்வேன்.
கடவுள் பெயரால் நடக்கும்
கொடுமைகள் பலவும் தடுப்பேன்.
மடமை போற்றும் துறவிகள்
மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் .
இலஞ்சம் ஊழல் இல்லாத
இலட்சிய ஆட்சிப் புரிவேன் ,
பஞ்சம் பட்டினி வாராமல்
பசிக்கு உணவை அறிவேன்.
மக்கள் வாழ்ந்திட ஆட்சியை
மனதில் நினைத்து ஆளுவேன் .
தக்க படிநான் இராவிடில்
தண்டனை தந்தே மாளுவேன் .