அத்தானே ! அத்தை மகனே !
தித்திக்கும் பேச்சு அழகா!
வித்தைகள் பல கற்றவனே !
நித்தம் எனக்குத் தரிசனம் தா.!
பெண்கள் மயங்கும் பேரழகா !
கண்கள் விரும்பும் கட்டழகா !
மலையென தோள்கள் பெற்றவனே !
மாலையிட சீக்கிரம் வந்துவிடு !
பகலை வெறுப்பாய் பார்க்கிறேன் !
இரவை முத்தமிட்டு அழைக்கிறேன் !
கனவுலகில் உன்னோடு வாழ்கிறேன்.!
நனவுலகில் என்னை வாழவிடு.!