கண்ணுக்கு எட்டிய தூரம்
முன்னும் பின்னும்
யாரையும் காணவில்லை
நான் மட்டும்
நடை மட்டும் குறையவில்லை
தனிமையும் எனக்கு
தெரியவில்லை
தனிமையை
உணரவேயில்லை
ஆனால் ..!
மௌனம் என்னோடு
பேசிக்கொண்டே வந்தது.
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.