கவிதை

உண்டு!

பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு !
பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு !
குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு !
கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு !
பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு !

 » Read more about: உண்டு!  »

கவிதை

யாருக்கும் வாய்ப்பதில்லை !

காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும், மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு!

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா!

 » Read more about: யாருக்கும் வாய்ப்பதில்லை !  »

கவிதை

உனக்கான கரை

உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.

 » Read more about: உனக்கான கரை  »