கவிதை

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய்
—-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து
தூய்மையான புகழுடனே உலகம் போற்ற
—-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச்
சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய்
—-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம்
தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித்
—-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே !

 » Read more about: இழந்து விட்ட கணப்பொழுது  »