கவிதை

எதைப் புணரத் தடவுகிறாய்?

என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.

மார்புகளும் புடைத்திருக்கவில்லை
இடையும் மெருகேறியிருக்கவில்லை
மாதவிலக்கும் வரும் வயதும் எனகில்லை

உடல் தெரிய அரைகுறை ஆடை அணியவில்லை
கண்ணால் கவர்ச்சி வலை வீசவில்லை
ஆணினித்தை பழிக்கவில்லை
பெண்ணியம் பேசவில்லை
புரட்சி காரியும் நானில்லை
அகங்காரமும் கொள்ளவில்லை
ஆணவ செருக்கும் எனக்கில்லை
திமிர் பேச்சும் பேசவில்லை
சரிசமமும் கேட்கவில்லை
பெண்ணுரிமை சட்டமும் பேசவில்லை
பெண்ணிய கவிதைகளும் எழுதவில்லை
அடக்குமுறை பற்றியும் உரையாற்றவில்லை
பெரியாரிசமும் உணர்த்தவில்லை
எதிர்த்து பேசவும் தைரியமில்லை

சாதி கலவரமும் நடக்கவில்லை
இன சண்டைகளும் வரவில்லை
மதமும் மாறவில்லை
இலங்கை பெண்ணும் நானில்லை
நுனி நாக்கு ஆங்கிலமும் பேசவில்லை
நடுஇரவில் எங்கும் செல்லவும் இல்லை

திங்க சோறும் கேட்கவில்லை
பழைய உடுப்பும் தேவையில்லை
பணங்காசும் திருடவில்லை

கலவி குறித்தும் அறிந்திருக்க வில்லை
சூழ்நிலை தாக்குதலும் நடத்த தெரியவில்லை

ஏன் என்னை தவறாக நெருங்குகிறாய்
வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறாய்

என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.

 » Read more about: எதைப் புணரத் தடவுகிறாய்?  »

By சீதா, சென்னை, ago
கவிதை

இழந்து விட்ட கணப்பொழுது

வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய்
—-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து
தூய்மையான புகழுடனே உலகம் போற்ற
—-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச்
சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய்
—-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம்
தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித்
—-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே !

 » Read more about: இழந்து விட்ட கணப்பொழுது  »

கதை

தாடி ஏன்?

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான்.

‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

 » Read more about: தாடி ஏன்?  »

By Admin, ago
கவிதை

வானம் தொடுவோம்!

விதையாய் விழு மண்ணில்
விருச்சயமாய் எழு விண்ணில்
தடைகளை உடைத்தெறிந்து வா..

கற்பாறைகளுக்குள்
முளைத்திருக்கும் சிறுசெடி போல
முட்டிமோதி முளைத்து வா..

பூமியின் மேற்பரப்பில்
விழுந்த விதைகள்
அடிஆழத்தின் ஆணிவேராய்

கண்களுக்கு புலப்படாமல்
காத்திருக்கும்
சிறுதுளி நீராக..

 » Read more about: வானம் தொடுவோம்!  »

கட்டுரை

வலியப் போய் மாட்டிக்கிட்டேன்!

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

 » Read more about: வலியப் போய் மாட்டிக்கிட்டேன்!  »

By Admin, ago
கவிதை

நட்பைத் தேடி

மூன்றெழுத்து சொர்க்கமிது,
முக்கனிகளின் சுவைபோல.
உதடுகளால் உரையாடாது.
உள்ளத்தால் ஒன்றி நிற்கும்.

துன்பத்தில் துணையாய் நிற்கும்.
துயர்நீக்கும் கோலினைபோன்று.
இனிக்கும் பொழுதுகள் தோறும்
இதயத்தை இறுக்கி அணைக்கும்.

 » Read more about: நட்பைத் தேடி  »

கதை

தெளிவுகள்

“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம்.

முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…”

அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும்.

 » Read more about: தெளிவுகள்  »

கதை

உங்களில் ஒருத்தி

காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை.

பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்..

மதியம் பெரும்பாலும் பழையசாதம்.

 » Read more about: உங்களில் ஒருத்தி  »

கவிதை

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும்
…..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்!
பாவாணர் உரைக்கும் பாட்டின்
…..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்!
பாவாணர் எழுச்சிக் காட்டும்
…..பழம்பெருமைக் காக்க வேண்டும்!
பாவாணர் வழிச்செல் நண்பா!

 » Read more about: பாவாணர் வழிச்செல் நண்பா!  »