மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

By Admin, ago
மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

By Admin, ago
மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »

By Admin, ago
பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

By Admin, ago
மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ இசை நுணுக்கம் ஏதுமிலை எடுத்துரைக்க இயைபுமொழி யிலக்கணங்கள் பொருந்தல் இல்லை விசையாகப் பாய்கின்ற வேக மில்லை வீறுமொழி அதிர்முழக்கம் அதிலே யில்லை பிசைகின்ற உயிர்க்காற்று ஊற்றி வைத்துப் பிழையறியாச் சிறுபாடல் இசைக்கின் றேன்யான் திசையெங்கும்‌ பரவுகிற இசைக்கோ வைக்குள் சிறியேனின் இளங்குரலைச் செவியேற் பாயோ உணர்வென்னும் தேனமிழ்தம் நிரப்பு கின்றேன் உயிர்உருகும் மெல்லிசையே இசைக்கின் றேன்யான் தணியாத பெருங்காதல் ததும்பும் என்றன் சாமீஉன் திருவடியில் உளம்கி டக்கும் அணியாத பூவாய்என் காதல் மாலை அடிமலர்க்கே சூட்டுகிறேன் அரசே உன்றன் மணிமார்பில் ஏற்பாயோ என்றி ருந்தேன் வந்ததென்னே என்குடிசை வாசல் தேடி என்இசையோ நீவிரும்பும் மலரா யிற்று எளியேனின் வாசலிலே நகைசெய் கின்றாய் என்அன்பே என்குடிசை வாசல் நின்றாய் யானறியேன் எங்கெங்கோ தேடு கின்றேன் என்அன்பே என்அன்பே என்பே னோநான் இளநகைப்பில் உயிர்சுழன்று வீழ்வே னோநான் என்முன்னே யிருப்பதனை அறிகி லேனே என்வாசல் அமுதத்தை சிந்து கின்றாய் எவ்வகையும் தகுதியிலா இரவ லன்யான் என்பொருட்டோ என்அரசே இங்கு வந்தாய் செவ்வியநின் புன்முறுவல் என்னை நோக்கிச் செய்கின்றாய் இம்மாயம் அறிவே னோநான் தெய்வதமே இச்சிறிய மலரை ஏற்றுச் செவ்வியபுன் னகைசெய்தே செல்லு கின்றாய் எவ்விதமும் நின்வருகை அறிந்தி ‌டாமல் நெகிழ்ந்தழுது‌ நின்றதனை என்ன சொல்வேன் தேம்புகிற என்செவியில் பண்ணி சைக்கும் திடீரெனஎன் திசையெல்லாம் தென்றல் வீசும் பூம்பொழில்கள் அசைவெல்லாம் அய்யோ நின்றன் புல்லாங்கு ழலாகக் கேட்கும் என்னே காம்புதிரும் மலரெல்லாம் களிவண் டார்க்கும் கண்ணீரோ வரம்பின்றிப் பொழியும் சாமி தீம்புனலே நீவந்து செய்த மாயம் இவையென்று சிறியேன்யான் தெரிகி லேனே கண்சுழன்று மெய்யுருகிக் கரைந்தே யென்றன் காதலெலாம் இசையாகிக் கனிந்தேன் அய்ய விண்மயங்கும் ஒலிகளிலே எனது பாடல் வெற்றுவெளிக் கலந்திடுமோ உன்பா தத்தில் பண்மயங்கிக் குழைந்திடுமோ மறைந்து போமோ பரபரப்பில் அருகிருக்கும் உனை மறந்தேன் அண்மையிலே உனையறியேன் அழுது நின்றேன் அரசே என் அய்யனே சிரித்துப்போனாய் கண்உதிர்க்கும் கண்ணீரே மலர் களாகக்‌ கைகுவித்தேன் எனையேற்றுக் கொள்வாய் நீயே! (மேலும்…)

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »