புதுக் கவிதை
யே ராசா ராசா…
இசைப்பாடல்
யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?
தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?
இசைப்பாடல்
யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?
தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?
கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!
விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!
» Read more about: கம்பன் புகழைப் பாடு மனமே! »
எங்கள் கவியரசர் இயற்றித் தந்தபொருள்
ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப் பொசுக்கி வாழ்வளிக்கும்
போதும் இனியெதற்குத் துன்பம் !
இன்னல் வரும்பொழுதும் இனிய கானமழை
என்றும் மனச்சுமையைப் போக்கும் !
தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்!
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று வாழும் உயிர்!
சிங்காரத் தண்டமிழின் சீர்கண்டு மெய்சிலிர்க்கும்!
» Read more about: திருப்புகழைப் பாடு மனமே! »
பாரதியார் போலிங்குப் பாரினிலே கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த விற்பன்னன்! – ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத் தங்கத் தமிழாலே!
பொங்கட்டும் இன்பப் பொழில்!
போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு) ஈடான என்றுமவன்!
செந்தமிழ் போற்றிடும் சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!
கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும் மோகன மே!
வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்!
வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
…… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
…… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
……
காற்றாய் என்னுள் வந்து போகிறாய்
காதல் கவிதைகள் தந்து போகிறாய்
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …
கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! - தேயவழி தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்! பீடும் பிணையும் பெருத்து! கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! - அற்புதமாய் அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்! வந்தோதி ஓங்குமே வாழ்வு!