புதுக் கவிதை

யே ராசா ராசா…

இசைப்பாடல்

யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?

 » Read more about: யே ராசா ராசா…  »

வெண்பா

கம்பன் புகழைப் பாடு மனமே!

கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!

 » Read more about: கம்பன் புகழைப் பாடு மனமே!  »

மரபுக் கவிதை

பாடு மனமே பாடு!

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
    போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
    என்றும் மனச்சுமையைப் போக்கும் !

 » Read more about: பாடு மனமே பாடு!  »

வெண்பா

திருப்புகழைப் பாடு மனமே!

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்!
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர்!

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும்!

 » Read more about: திருப்புகழைப் பாடு மனமே!  »

வெண்பா

பாட்டுக்கோர் புலவன் பாரதி!

பாரதியார் போலிங்குப்  பாரினிலே  கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த  விற்பன்னன்! – ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத்  தங்கத் தமிழாலே!
பொங்கட்டும்   இன்பப் பொழில்!

போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு)  ஈடான என்றுமவன்!

 » Read more about: பாட்டுக்கோர் புலவன் பாரதி!  »

மரபுக் கவிதை

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!

செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!

கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும்  மோகன மே!

 » Read more about: இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!  »

வெண்பா

உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்!

 » Read more about: உள்ளத்திற் கஃதே உயர்வு!  »

கவிதை

பேச்சில் இனிமை வேண்டும் !

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
…… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
…… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
…… 

 » Read more about: பேச்சில் இனிமை வேண்டும் !  »

கவிதை

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 
காதல் கவிதைகள் தந்து போகிறாய் 
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…

 » Read more about: காற்றாய் என்னுள் வந்து போகிறாய்   »

கவிதை

கம்பன் புகழைப் பாடு மனமே !

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! - தேயவழி தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்! பீடும் பிணையும் பெருத்து! கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! - அற்புதமாய் அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்! வந்தோதி ஓங்குமே வாழ்வு!