கட்டுரை

காகிதமா ? கணியமா ?

நூலாசிரியர் தமது நூலை எத்துணைமுறை வேண்டுமாகிலும் இணைய வழியாகவே திருத்தல், சேர்த்தல், நீக்கல் என உடனுக்குடன் புதுப்பிக்கலாம். மறுபதிப்புவரை காத்திருப்பது போன்றதல்ல மின்பதிப்புகள். ஒருமுறை இணைய தடத்தில் சேர்த்துவிடின், நூலானது உலகம் முழுதும் உலா வரும். யாரும், எங்கும், எந்நேரமும் நூலைப் பார்க்கலாம், வாங்கலாம், படிக்கலாம், கருத்துப் பதிவு செய்யலாம். இதற்கென கணினியிலும் கைபேசியிலும் மின்படிப்பானிலும் பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம். திருக்குறள் முழுதும் பலரது உரைகளுடன் கைபேசியில் பதிவிறக்கம் செய்து சேமிக்கும் செயலிகளைப் பலரும் இன்று பயன்படுத்துகின்றனர். பயணங்களில் படிக்க இது பேருதவியாய் இருக்கும். படிக்கும்போது குறளை பண்ணுடன் ஒலிக்கக் கேட்கலாம். வள்ளுவர் இன்றிருந்தால் எவ்வளவு மகிழ்ந்துபோவார் ! ‘எங்கும் நூலே, எவரும் படிக்கலாம்’ என்பதே மின்னூல் முழக்கமாகும் !