கவிதை

சுரதா

சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்! சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்! மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்! ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்! வேகத்தில் எப்போதும் எழுதிடாமல் விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!