கதை

நண்பனும் ஸ்நேகிதியும்

அவளது மல்லிகைப்பூ, அவன் விலகினாலும் தொட்டு தொட்டுப் பேசும் களங்கமில்லா அவளின் நேசம், குளிர்ந்த கரங்கள், அழகிய சிரிப்பு.. இவையெல்லாம் அவளின் காதல் நிஜம் தான் என்று ஆனந்தனின் இதயத்திற்கு சொல்ல கட்டியணைத்து ஒரு முத்தமிட உள்மனம் ஆணையிட்டும் நாகரீகம் அறிவோடு வந்து இருவரையும் கட்டுக்குள் அடக்கி, “ நல்ல நண்பர்கள், ஆனால் திருமணம் முடிந்தவர்கள்” என்று உணர்த்திய பொழுது அவர்கள் நிஜத்திற்கு வந்தார்கள்.

கவிதை

தாய்மை

மழை என் மீது கருணை காட்டிய அடுத்த நொடியில் மூச்சு வாங்க கதவைத் திறந்தேன் அதிசயம் ! அதிசம் ! பக்கத்து வீட்டின் நேற்றைய சண்டையின் தோழி என் பிள்ளைக்கு உணவூட்டுகிறாள் அவளின் உடலிலிருந்து !