புதுக் கவிதை

தீபாவளி

எனது சிறுவயது
தீபாவளி எப்படி!!!

என்று வரும் என்றே எனை
ஏங்க வைக்கும்

காலை எழுந்தவுடன்
நாட்காட்டி பார்த்து பார்த்து
தாள்கள் பழசாய்ப்போகும்

என்ன வண்ண உடை
எங்கே எடுப்பது கவலை
வேறு வந்து ஆட்டும்

யாருமே அணியாத
புது வகைத்துணியில்
நான் மட்டுமே அழகியாக
தோன்றவே விருப்பம் கொள்ளும்

தீபாவளிக்கு ஐந்துமுறையேனும்
கடைக்குச்செல்லவேண்டும்

புதிதாக என்ன மாதிரி உடை
கண்கள் வட்டமிடும்
உனக்கு மட்டுமே இத்தனை
நேரம் எடுத்தால் மற்றவர்களுக்கு??

 » Read more about: தீபாவளி  »