புதுக் கவிதை

வாய்க்கும் நல்லதீபாவளி

ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி இருளகற்றி
மருளகற்றி மனம்மகிழ தீபாவளி வருமெமக்கு
நிறைவான மனதுவர தீபாவளி உதவிடட்டும்
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி! புலனெல்லாம் தூய்மைபெற புத்துணர்வு பொங்கிவர அலைபாயும் எண்ணமெலாம் நிலையாக நின்றுவிட மகிழ்ச்சியது மனமெங்கும்
மத்தாப்பாய் மலர்ந்துவிட வாசல்நின்று பார்க்கின்றோம் வந்திடுவாய் தீபாவளி!  » Read more about: வாய்க்கும் நல்லதீபாவளி  »

கவிதை

யாருக்கும் வாய்ப்பதில்லை !

காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும், மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு!

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா!

 » Read more about: யாருக்கும் வாய்ப்பதில்லை !  »