புதுக் கவிதை
வாய்க்கும் நல்லதீபாவளி
ஒளியூட்டும் இனியவிழா
தீபாவளி இருளகற்றி
மருளகற்றி மனம்மகிழ
தீபாவளி வருமெமக்கு
நிறைவான மனதுவர
தீபாவளி உதவிடட்டும்
நலம்விளைக்க மனமெண்ணி
வரவேற்போம் தீபாவளி!
புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மகிழ்ச்சியது மனமெங்கும்
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி! » Read more about: வாய்க்கும் நல்லதீபாவளி »